Subscribe Us

header ads

இனவாதிகளால் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு தங்க மோதிரத்தை காணிக்கையளித்த பெண்



கண்டி, தெல்தெனியாவில் இனவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து, வீடிழந்து, சொத்துக்கள் இழந்து, பள்ளிவாசல்ளை இழந்து தவிக்கும் நமது உறவுகளுக்காக ஏறாவூரில் நிவாரண பணியை தொடங்கியிருக்கிறோம்,

என்ற எனது முகப்புத்தக பதிவை பார்த்த ஒரு சகோதரி, என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு,எனது வீடுவந்து நிவாரணத்தை பெற்று செல்லுங்கள் என்றார்.


தாமதிக்காது அவரது வீடு சென்றதும், கை விரலில் போட்டிருந்த "தங்க மோதிரத்தை "களட்டி என்னிடம் தந்து, இதைத்தவிர என்னிடம் வேறொன்றுமில்லை என்று சொன்ன அந்த வார்த்தை இருக்கிறதே!!! 

என்னை ஒரு கணம் கண் கலங்க வைத்துவிட்டது.


அச் சகோதரிக்கு வல்ல நாயன் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும்,, செல்வச் செழிப்பையும் வழங்கியருள்வானாக.(ஆமீன்)

-Nasir-


Post a Comment

0 Comments