Subscribe Us

header ads

கசப்பாக இருந்தாலும் இந்த உண்மையை நாம் ஏற்றுதான் ஆகவேண்டும்.

இனவாதிகள் கொஞ்சப்பேராக இருந்தாலும் இலங்கையில் பெரும்பாலான சிங்களவர்கள் இந்த நாசகார செயற்பாட்டை மனதாலேனும் ஆதரிக்கிறார்கள்.

கசப்பாக இருந்தாலும் இந்த உண்மையை நாம் ஏற்றுதான் ஆகவேண்டும்.


அண்மையில் முஸ்லிம்கள்மீது இனவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களாக இருக்கட்டும், இதற்கு முன்னர் நடத்தப்பட்ட அத்துமீறல்களாக இருக்கட்டும் அவை அனைத்துயுமே பெரும்பாலான சிங்களவர்கள் ஏதாவது ஒரு அடிப்படையில் நியாயப்படுத்துகிறார்கள்.


"அரு முஸ்லிம்உனத் நியம கொள்ளெக் பங்"
"அவன் முஸ்லிமாக இருந்தாலும் நல்ல பொடியன்"

எங்களுடன் அன்றாடம் பழகும் சிங்கள நண்பர்கள் இப்படி சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறோம்.


முஸ்லிமாக இருந்தாலும்..... என்ற சொல்லில் இருக்கும் உள் அர்த்தம் பயங்கரமானது.

இந்த நச்சுவிதை இலங்கையில் இருக்கும் எல்லா சிங்களவர்கள் மனதிலும் விதைக்கப்பட்டு இருக்கின்றது.

எங்களிடம் 30 வருடம் வேலை செய்யும் சிங்கள சகோதரர் ஒருவரிடம் கேட்டால் கூட...

எனது முதலாளி "முஸ்லிமாக இருந்தாலும்" .....

மிச்சம் நல்லவர் என்றுதான் சொல்வார்.


இந்த முஸ்லிம் என்ற அடையாளம் மீது அதிகமான சிங்களவர்களுக்கு எப்போதும்  ஒரு சந்தேகம் இருக்கிறது.


இன்னும் சிலருக்கு முஸ்லிம்களின் வாழ்க்கை முறை மீது பொறாமை இருக்கிறது.


அதிகமான சிங்களவர்களுக்கு அவர்களது பக்கத்துவீட்டில் இருக்கும் முஸ்லிம்கள் நல்லவர்கள்.


அவர்களது அலுவலக முஸ்லிம் நண்பர்கள் நல்லவர்கள்.


அவர்களது பல்கலைக்கழக  முஸ்லிம் நண்பர்கள் நல்லவர்கள்ஆனால் நாட்டில் இருக்கும் ஏனைய முஸ்லிம்கள்  இனவாதிகள்,  நாட்டை நேசிக்காத சுயநலவாதிகள்.


இப்படித்தான் சிந்திக்கிறது  இந்த பெரும்பான்மை சமூகம்.


இப்படி சிந்திக்கும் சமூகத்தில் இந்ந சகவாழ்வு, புரிந்துணர்வு இதெல்லாம் சாத்தியப்படுமா ?


கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட  இயற்கை அனர்த்தங்களின்போது முஸ்லிம்கள் சிங்கள சமூகத்துக்கு உயிரை பனயம் வைத்து உதவி செய்தார்கள்.


அவர்களும், ஊடகங்களில் முஸ்லிம்களைப் புகழ்ந்து தள்ளினார்கள்.


ஆனால் ஒரு இனவாதப் பிரச்சினை வரும்போது  முஸ்லிம்களைப் புகழ்ந்த இந்த ஊடகங்களோ,சிங்களவர்களோ முஸ்லிம்கள் சார்பாக குரல்கொடுத்தார்களா ?


எனவே இலங்கை சூழலில் இந்த "சகவாழ்வு" என்ற எண்ணக்கரு வெறும் பம்மாத்து மட்டும்தான்.

முஸ்லிம்கள் "தன்சல்" கொடுப்பதன் மூலமோ பெளத்த தேரர்கள் "ஜும்மா"வுக்கு வருவதன் மூலமோ மத நல்லினக்கம் மன்னங்கட்டி  என்று ஒன்றும் ஆகப்போவதில்லை.


முஸ்லிம் சமூகம் கல்வியில்,பொருளாதாரத்தில், அரசியலில் பன்பாட்டில் ஒரு தன்னிறைவான சமூகமாக மாறவேண்டும்.

எமது சமூகத்தின் மீது ஒரு பயம் கலந்த மரியாதை அவர்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும்.


அந்த பயமும் மரியாதையும் எம் மூதாதயர்கள் மீது சிங்களவர்களுக்கு நிறையவே இருந்தது.


அந்த நிலையை நாம் முழுமையாக கெடுத்துவிட்டோம்.

அதன் பாதிப்பைத்தான் நாம் அண்மைக்காலமாக அனுபவித்துவருகின்றோம்.


சரியான திட்டமிடலுடன் ஒரு சமூகமாக ஒற்றுமையுடனும் தைரியத்துடன் நாம் செயற்படாவிட்டால்...


இலங்கை என்ற நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments