(06/12/2017) கடற்படையினரின் 67வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சர்மமத பிரார்தனை நிகழ்வின் இஸ்லாமிய சமய நிகழ்வு கல்பிட்டி கடற்படையினரின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பஸார் பள்ளி நிர்வாகத்தினரால் பஸார் பள்ளியில் நடைபெற்றது.இதில் வழமைக்கு மாறாக இஸ்லாமிய விழிப்புணர்வு பயான் உரை சுமார் ஒரு மணித்தியாலம் அழகிய சிங்கள மொழியில் கொழும்பைச் சேர்ந்த நிதா பெளடேசன் உறுப்பினர் மெளலவி பைஸல் அவர்கள் உரையாற்றினார்கள்.
பின்னர் நிதா பெளடேசன் நிறுவனத்தால் சிங்கள மொழி இஸ்லாமிய புத்தகங்களும் நிகழ்வி கலந்து கொண்ட அனைத்து கடற்படையினருக்கும் வழங்கப்பட்டன.
இறுதியில் உங்கள் உரையால் இஸ்லாம் பற்றி ஒரு தெளிவு கிடைத்தது என அதில் கலந்து கொண்ட கடற்படையினர் கூறினர்.
-Rizvi Hussain-
0 Comments