புத்தளம் நகர சபையின் சுகாதார பரிசோதகர் (PHI) சுரேஸ் அவர்கள் சட்ட விரோத கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த போது புத்தளம் நகர சபையின் வாகனத்தில் இருந்து பலவந்தமாக இலுத்து சுமார் 15 பேர் கொண்ட கடையர் கும்பலினால் கடுமையாக தாக்கப்பட்டு காயங்களுடன் புத்தளம் தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.
ஆனால் குறித்த காடையர்கள் கும்பலில் ஒருவேரேனும் இது வரை கைது செய்யப்படாததனை தொடர்ந்து புத்தளம் பொலீசாருக்கு அவர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் புத்தளம் நகர சபையின் செயளாளரினால் கோரிக்கை விடப்பட்டும் இது வரை எவரும் கைது செய்படாமல் இருப்பதனை கண்டிக்கும் முகமாகவும், அந்தக்காடையர்களை கைது செய்து தண்டனை வழங்குமாரும் கோரி நாளை (14.11.2017) காலை தொடக்கம் அந்தக் காடையர்களை கைது செய்யும் வரையிலும் புத்தளம் நகர சபை அலுவலக நடவடிக்கைகள் மற்றும் புத்தளம் பொது நூலகம், சுகாதாரப் பிரிவு, வேலைப்பகுதி உட்பட நகரத்தில் குப்பை கூலம் உட்பட அனைத்து பகுதி ஊழியர்களும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மாணித்துள்ளனர்.
இந்த பணி பகிஷ்கரிப்பு காடையர்களை கைது செய்யும் வரை தொடரும் எனவும் விஷேடமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
-சகீர் முஹம்மட்-
0 Comments