Subscribe Us

header ads

பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை விழிப்புணர்வுக்காக என்ற பெயரில் பரப்பாதீர்கள்!


இனங்களுக்கிடையில் உண்டாகும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செய்திகளை எக்காரணம் கொண்டும் சமூக ஊடகங்களில் பரப்பாதீர்கள். இதன் மூலம் அனாவசியமான முடிவுகளே எட்டப்படும். சமூக அமைதி சீர்குழைந்து பாதிப்புகள் பன்மடங்காகும்.

அவதூறுகளும், அதிரடி முடிவுகளும் பெருகும்.

ஆதலால், குர்ஆனின் வழிகாட்டலுக்கு ஏற்ப செயற்பட்டு தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவோம்.

وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ

மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள். (4:83)

- Farzan Moulavi chilaw.

Post a Comment

0 Comments