Subscribe Us

header ads

புத்தளம் மாவட்ட சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்க்கட்சியிடம் கோட்டை விட்டுள்ளது மைத்திரி தரப்பு


புத்தளம் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மைத்திரி தரப்பு, கூட்டு எதிர்க்கட்சியிடம் கோட்டை விட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சி சார்பில் வெற்றிருந்தனர்.

சனத் நிஷாந்த, பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ ஆகியோரே அந்த மூவருமாகும். இவர்களில் சனத் நிஷாந்த ஆரம்பம் தொட்டு கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

பிரியங்கர ஜயரத்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் தற்போது கூட்டு எதிர்க்கட்சி பக்கம் சென்றுவிட்டனர்.

இதன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லாத கைசேதம் மைத்திரி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments