Subscribe Us

header ads

மாணவர்களுக்கு வழங்கும் சீருடைக்கான வவுச்சரில் இன்னுமொன்று அட்டிங்


ஸ்ரீலங்காவில் உள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கான மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளைக் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் சுமார் 42 இலட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments