Subscribe Us

header ads

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது ; இலங்கையில் சம்பவம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக பெண்களுடன் நட்புறவு கொண்டு அவர்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவிசாவளை, சீத்தாவக்கை பாடசாலை வீதியில் வைத்து மிரிஹான குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வட்டாபொத்த நிவித்திகல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாதுக்க, களுத்துறை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் சந்தேக நபரை இன்றைய தினம் கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments