பிரான்ஸ் நாட்டு பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் 2 ஏர் இந்திய விமானங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் பயணம் செய்த இந்திய பெண் பயணியின் கை எனக் கருதப்படும் சிதிலமடையாத உடல் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு நடந்ததோர் விபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகள் உயிரிழந்தனர். அதே பகுதியில் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு ஏர் இந்தியா போயிங் 707 ரக விமான விபத்தில் 117 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த இரு விமான விபத்துக்களும் மாண்ட் பிளாங்க் பகுதியில் நடைபெற்றது.
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் 4 எஞ்சினில் 1 எஞ்சினும் இந்தக் கையுடன் கிடைத்துள்ளது. வேறு சில உடற்பாகங்களும் கிடைத்துள்ள போதிலும் அவை இந்த கைக்குரிய இந்திய பெண் பயணியுடையது அல்ல என இவற்றை கண்டுபிடித்த ஆய்வாளர் டேனியல் ரோச்சி என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விரு விமான விபத்துக்களில், இந்தக் கை 1966 ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து (மும்பை) நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பெண்ணுடையதாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
சுவீஸ் நாட்டு பகுதியில் உள்ள இதே ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் கடந்த 10 தினங்களுக்கு முன் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதிகள் இருவரின் உடல் கெடாமல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments