Subscribe Us

header ads

ஆகஸ்ட் 03... புத்தளம் வரலாற்றில் கறைப்படிந்த அந்த கருப்பு நாள்...


ஆகஸ்ட் 03 வந்தாலே புத்தளத்து உள்ளங்கள் உணர்ச்சி பொங்க தங்களது ஆதங்கங்களையும், மனகவலைகளையும் சமூகவலைத்தளங்களில் மட்டுமல்ல தெருவோரங்களிலும் தேனீர்கடைகளிலும் கொட்டித்தீர்த்த அந்த மறக்கவும் மண்னிக்கவும் முடியாத ஒரு மாமனிதரின் திட்டமிடப்பட்ட மரணத்தின் மனம் நீங்கா நினைவு நாள்.

அந்த நல்ல மனிதர் கடத்தி கொலை செய்யப்பட்டு நேற்றுடன் 06 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வழமையாக சமூக வளத்தளங்களில் உணர்ச்சி பாய துள்ளிக்குதித்த அரசியல் தலைமைகள்,ஆண்மீக தலைமைகள்,சமூக ஆர்வளர்கள் என்று பலதரப்பட்ட தரப்பினர்கள் தற்பொழுது அமைதி காத்துள்ளனர்.

அன்றாடம் முகப்புத்தகத்தில் அடுக்கு மொழியில் அநியாத்திற்கு எதிராக எழுத்துக்கள் மூலம் எதிர்ப்பு தெரிவுக்கும் எழுத்தாளர்கள் கூட இன்று கூலி அடிமை எழுத்தாளர்களாக விலைக்கு வாங்கப்பட்டுள்ள ஒரு அவல நிலை.

தனது சொந்த மண்னின் மைந்தர்களுக்கு வளங்கள் நீதியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற விடா பிடியான கோரிக்கைகளுக்காய் மாமனிதர் 
மர்ஹூம் CTF ராசிக் அவர்களுக்கு நடந்த அநீதி அவரோடு நின்று விட கூடியது என்ற நினைப்பில் நாம் ஓய்வெடுக்க முடியாது. நமது மண்ணிற்காக குரல் கொடுக்கின்ற இண்ணும் எத்தனையோ எத்தனையோ ராசிக்களையும் அப்துல்லாக்களையும் நாம் பறிக்கொடுக்க மாட்டோம் என்று எவராவது உத்தரவாதம் அளிக்க முடியுமா???


ஒரு சில சில்லரைகள் தூவி விடப்பட்டு போடப்பட்ட காபட் பாதைகள்...

ஒன்றுப்பட்ட புத்தளத்தின் ஒற்றுமைதை இரவோடு இரவாக சின்னப்பின்னமாக்கி குடும்ப ஆட்சியின் எற்றத்துக்காய் வாங்கப்பட்ட தேசியப்பட்சியல்...

பாடசாலை காலம் முதல் பதவி மோகம் தலைக்கேறி எதிர்கால அரசியல் தலைமை என்ற பகல் கனவில் இளஞ்சர்களை காவு கொள்வதற்காய் அடிமை சாசனம் எழுதப்பட்ட இளைஞ்சர் அமைப்பாளர்...

முதுகெழும்பு உக்கி போனதால் நிமிர்ந்து நின்று உழைக்க வழி இல்லாமல் கூனிக்குறுகி கும்பிடு போடும் வேலை வாய்ப்புக்கள்...

அரச தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம் பார்ப்பது வெளி உலகுக்கு தெரிந்தவுடன் அதை மறைப்பதற்காய் கொடுக்கப்படும் பொன்ஷனை பெற்றுத்தராத தையல் இயந்திரங்கள்...

வீடு கட்டவே வழி இல்லாத பரம ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுப்பது போன்று சீன் போடும் காற்றுப்போன சிமேந்து மூட்டைகளும் காற்றில் பறக்கும் தகரங்களும்...

என்று இண்னும் புதிதாக முளைத்துள்ள வங்குரோத்து அரசியலின் முதலீடுகளும் எமது மனசாட்சியை கொலை செய்து விட்டதா???

சகோதரர் Thaiyoob Mujahidம் சகோதரி Nazliya Cader ம் இந்த அநியாத்தின் அகோரத்துக்கு எதிராக குரல் கொடுத்தால் மட்டும் முழு புத்தளமே குரல் கொடுத்தது போன்றாகி விடுமா???

அல்லது...  தேர்தலே இல்லாத நல்லாட்சியில்...அடுத்த தேர்தலிலாவது அநியாய காரர்களுக்கு வாக்குகளின் மூலம் தக்க பதிலடி கொடுப்போம் என்ற காத்திருப்பா???


இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

இனியும் அநீதிகள் இடம்பெறாமல் அவதானமாக செயற்படுவோம்.


Hameed Ushama

Post a Comment

0 Comments