Subscribe Us

header ads

பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ச


ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்க வேண்டும் அல்­லது தம்மை எதிர்க்­கட்சி வரிசையில் அமர அனு­ம­திக்க வேண்டும். இல்­லையேல் இந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து நிரந்­த­ர­மாக வெளி­யே­ற­வேண்டி ஏற்­ப­டு­மென ‘ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அருந்­திக்க பெர்­னாந்து எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இது குறித்து தெரி­வித்­துள்­ள­தா­கவும் தமது கோரிக்­கைக்கு  உரிய பதில் கிடைக்­கா­த­வி­டத்து அமைச்­சர் கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள் அடங்­கிய ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியைச் சேர்ந்த 18 பேர் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­ற­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது
அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த 18 பேர் அர­சி­லி­ருந்து வெளி­யேறி எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் எதிர்க்­கட்சி வரி­சையில் அமரத் தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம்  அது தொடர்­பாக கடந்த 12 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யிடம் தெரி­வித்தோம். அதற்கு எதிர்­வரும் டிசம்பர் மாதம் வரை அந்த யோச­னையை கைவி­டு­மாறு ஜனா­தி­பதி எம்­மிடம் கோரினார்.
தொடர்ந்து இந்த அர­சாங்­கத்தில் இருப்­ப­தற்­கான உத்­தே­ச­மில்லை. ஆகையால் இந்த விசயம் தொடர்­பாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு வாய்ப்பு வழங்­கினால் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஆரா­யலாம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.
பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கினால் அதற்­கான மாற்று ஏற்­பாடு என்­ன­வென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தம்­மு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போது கேட்­ட­தா­கவும் அதற்கு மஹிந்த ராஜபக்ஷவை பிர­த­ம­ராக்க தமது குழு விரும்­பு­வ­தா­கவும் பெரும்­பான்­மை­யா­னோ­ரது விருப்­பமும் அதுவே என ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்துக் கூறி­ய­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.
அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் டி.பி.ஏக்­க­நா­யக்க, நிமால் லான்ஸா, துலிப் விஜே­சே­கர, சுமேதா ஜய­சேன, சுசந்த புஞ்­சி­நி­லமே, லக்ஸ்மன் வசந்த பெரேரா, தாராநாத் பஸ்­நா­யக்க, இந்­திக்க பண்­டா­ர­நா­யக்க, நிசாந்த முத்து ஹெட்டி கம, பியங்­கர ஜயரட்ன, சுசில் பிரேம் ஜயந்த, டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டோரே இவ்வாறு அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் மேலும் பலருடன் கலந்துரையாடிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments