Subscribe Us

header ads

ரயிலில் பய­ணித்த குற்­றத்­திற்­காக 68 பிர­யா­ணி­க­ளி­ட­மி­ருந்து ஐந்து இலட்சம் ரூபாவை தண்­டம்! காரணம் இதுவா?


பயணச் சீட்­டு இன்றி ரயிலில் பய­ணித்த குற்­றத்­திற்­காக 68 பிர­யா­ணி­க­ளி­ட­மி­ருந்து ஐந்து இலட்சம் ரூபாவை தண்­டப்­ப­ண­மாக ரயில்வே போக்­கு­வ­ரத்து கட்­டளைப் பிரிவு அற­விட்­டுள்­ளது. 
கொழும்பு - மரு­தானை, பிர­தான ரயில் நிலை­யத்தில், கடந்த 14ஆம் திகதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை­யி­லான 3 மணித்­தி­யால காலப்பகு­திக்குள்  ரயில்வே பாது­காப்பு அதி­கா­ரி­க­ளினால்  மேற்­கொள்­ளப்­பட்ட விசேட சோதனை நட­வ­டிக்­கை­யின் ­போதே இவ்­வா­றான 68 பேரையும் பிடிப்­ப­தற்கு முடிந்­த­தாக, ரயில்வே பாது­காப்பு படைப் பிரிவு பிர­தம அதி­காரி அநுர பிரே­ம­ரத்ன தெரி­வித்தார். 
பயணச் சீட்­டின்றி ரயிலில்  பிர­யாணம் மேற்­கொண்ட குற்­றத்­திற்­காக ஒரு பய­ணி­யி­ட­மி­ருந்து 3020 ரூபா வீதம் 59 பய­ணி­க­ளிடம் தண்டப் பண­மாக 1,78,180 ரூபா அற­வி­டப்­பட்­ட­தா­கவும், ஏனைய 9 பய­ணி­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடப்­பட்டு தண்டப் பணத்தை பின்பு வழங்­கு­வ­தற்­கான ஒப்­பந்த அடிப்­ப­டையில் மற்றும்  ஏற்­றுக்­கொள்ளக் கூடிய 9 பிணை­களை முன்­னி­றுத்தி, அவர்கள் விடு­விக்­கப்­பட்­ட­தா­கவும் அவ்­வ­தி­காரி குறிப்­பிட்டார். 
அர­சாங்க மற்றும் தனியார் நிறு­வ­னங்­களில் கடமை புரியும் பணி­யா­ளர்கள் உள்­ளிட்ட இரண்டு மற்றும் மூன்று மாதங்கள் வரையில்  காலா­வ­தி­யான பருவச் சீட்­டு­களை பயன்­ப­டுத்திக் கொண்டு,  ரயிலில்  பிரயாணம் செய்தவர்களையே இவ்வாறு பிடி க்க முடிந்ததாகவும் பிரதம அதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments