Subscribe Us

header ads

மூன்றாம் உலகமகா யுத்தம் வளைகுடா நாடுகளில் இருந்தே... பல வருடங்களுக்கு முன்பு கணிப்பு


வளைகுடா பிராந்தியத்தில் தீவிரவாத செயற்பாட்டை கட்டார் ஊக்குவிக்கின்றது என்று கூறி அந்த நாட்டுடனான இராஜதந்திர, மற்றும் ஆகாய, கடல்வழி, தொடர்புகள் அனைத்தையும் நேற்றுடன் துண்டித்து கொண்டிருக்கின்றது சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்.
குறிப்பிட்ட நாடுகளில் வாழும் கட்டார் மக்களையும், கட்டாரில் வாழும் பஹ்ரைன் மக்களையும் காலக்கெடு விதித்து வெளியேற கூறியுள்ளது அந்தந்த நாடுகள். மூன்றாம் உலகமகா யுத்தம் வளைகுடா நாடுகளில் இருந்தே ஆரம்பிக்கப்படும் என்பது பல வருடங்களுக்கு முன்பு கணிக்கப்பட்டே வைக்கப்பட்ட ஒன்று, அதற்கு தகுந்தது போல வல்லரசுகளால் காய் நகர்த்தப்பட்டு இப்போது இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கின்றது, இனி யுத்தத்தின் அறுவடை மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
சூழ்ச்சிக்கார நரிகளின் தந்திரோபாயத்துக்கு விலை போகும் அரபு நாட்டு ஆட்சியாளர்களின் இந்த செயற்பாடு ஒன்றும் ஆச்சரியப்படுத்த கூடியதல்ல. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சவூதி, கட்டார், ஓமான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைட் ஆகிய ஆறு நாடுகளும் கல்ப் கோப்ரேஷன் கௌன்சில் என்கின்ற பெயரில் இணைந்தே இதுவரை காலமும் செயற்பட்டு வருகின்றது, இந்த ஒன்றினைந்த செயற்பாடு பிராந்தியத்தில் இதுவரையிலும் அமைதியை தக்க வைத்துக்கொண்டிருந்தது, இப்போது கட்டார் தனிமைபப்டுத்தபட்டிருப்பதால் கல்ப் கோப்ரேஷன் கௌன்சிலில் இருந்து அது விலகி தனக்கென ஒரு புதிய உறவை தேட ஆரம்பிக்கும்.
கட்டாரின் போக்கில் எரிச்சல் அடையும் ஏனைய நாடுகள் ஒன்று சேர்ந்து நிச்சயம் அதன் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் போது மிகப்பெரிய அளவிலாக கட்டார் எதிர்வினையாற்ற தொடங்கும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே ஈராக் , எகிப்து, yemen, சிரியா, என வரிசையாக உள்நாட்டு யுத்தங்களை ஆரம்பித்து அந்த நாடுகளை சீரழித்து கொண்டுவந்த அழிவு சக்திகளின் வேலை விரைவில் மத்திய கிழக்கை துண்டாடும்.
கட்டார் உட்பட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தமது பிரச்சினைகளை சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்வதே மத்திய கிழக்கு உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் அமைதியாக இருக்க காரணமாக இருக்கும்.
குடும்பத்துக்குள் குத்து வெட்டு வந்தால் நிலைமை மிக மோசமாக மாறும். இறைவன் பாதுகாக்க வேண்டும் இந்த மக்களை.

-Razana Manaf-

Post a Comment

0 Comments