Subscribe Us

மது­போ­தையில் வீடு திரும்பும் கண­வர்­களை அடித்து துவைப்­ப­தற்­தற்­கு மனைவிகளுக்கு துடுப்புகளை வழங்கிய அமைச்சர்


இந்­தி­யாவின் அமைச்சர் ஒருவர் மது­போ­தையில் வீடு திரும்பும் கண­வர்­களை அடித்து துவைப்­ப­தற்­தற்­காக மண­ம­கள்­க­ளுக்கு பல­கை­யி­லான துடுப்­பு­களை வழங்­கி­யுள்ளார்.

மத்­திய பிர­தேச மாநி­லத்தின் சாகர் நகரில் அ­க் ஷய திரி­தி­யையை முன்­னிட்டு கடந்த சனிக்­கி­ழமை 700 ஜோடி­க­ளுக்கு  ஒரே இடத்தில் திரு­மணம் நடை­பெற்­றது.  

விம­ரி­சை­யாக நடை­பெற்ற இத்­ தி­ரு­ம­ணத்தில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கலந்து கொண்­டனர். இத்­தி­ரு­ம­ணங்­களை மாநில கிரா­மப்­புற வளர்ச்சி அமைச்சர் கோபால் பார்­கவா நடத்தி வைத்தார்.
அப்­போது மண­ம­கள்கள் அனை­வ­ருக்கும் பல­கை­யி­லான பலகைத் துடுப்­பு­களை அமைச்சர் கோபால் பார்­கவா வழங்­கினார். பொது­வாக சலவை செய்­யப்­படும் ஆடை­களை அடித்துத் துவைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் துடுப்பு இது.
“குடித்­து­விட்டு வரும் கண­வனை இதனால் அடி­யுங்கள்” என அத்­து­டுப்பில் எழு­தப்­பட்டும் இருந்­தது.
“கணவன் குடித்­து­விட்டு வந்தால் மர­ பேட்டால் அடிக்க வேண்டும் எனவும், இது­கு­றித்து காவல்­துறை வழக்குப் பதிவு செய்ய மாட்­டாது” எனவும் அமைச்சர் கோபால் பார்­கவா தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
மது­போ­தையில் வரும் கண­வர்­களை மண­ம­கள்கள் முதலில் பேசி திருத்த முயற்­சிக்க வேண்­டும்.
அதற்கு அவர்கள் செவி­ம­டுக்­கா­விட்டால் துடுப்­புகள் பேசட்டும். தமது கண­வர்கள் குடித்­து­விட்டு வந்தால் வன்­மு­றை­யாக நடந்­து­கொள்­கி­றார்கள் எனவும், தான் சேமித்த பணத்­தை­யெல்லாம் எடுத்­துக்­கொள்­கி­றார்கள் எனவும் பெண்கள் கூறு­கின்­றனர். 
பெண்­களை வன்­மு­றையில் ஈடு­படத் தூண்டும் நோக்கம் எனக்­கில்லை. வன்­மு­றை­களை தடுப்­ப­தற்­கா­கவே இத்­து­டுப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன” என அமைச்சர் கோபால் பார்கவா தெரிவித்தார்.
புதிதாக திருமண மாகும் பெண்களுக்கு வழங்குவதற்காக சுமார் 10,000 துடுப்புகளுக்கு அவர் கட்டளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments