Subscribe Us

வரலாற்றில் இன்று 2 - உலகில் நடந்தவைகள் என்ன? விபரங்கள் உள்ளே?


1519 : இத்­தா­லிய ஓவியர், சிற்பி, பொறி­யி­ய­லாளர் என பல்­துறை விற்­பன்­ன­ராக விளங்­கிய லிய­னார்டோ டாவின்ஸி கால­மானார்.

1536 : இங்­கி­லாந்து மன்னர் 8 ஆம் ஹென்­றியின் மனை­வி­யான ராணி ஆன் போலெய்ன் ஒழுக்­கக்­கேடு, தேசத்­து­ரோகம், மாந்­தி­ரிக நட­வ­டிக்­கைளில் ஈடு­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டார்.


1933 : ஜேர்­ம­னியில் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு அடோல்வ் ஹிட்­ல­ரினால் தடை விதிக்­கப்­பட்­டது.

1936 : எத்­தி­யோப்­பிய மன்னர் ஹிலி செலாஸ்ஸி, நாட்­டை­விட்டு வெளி­யே­றினார்.

1945 : 2 ஆம் உலக யுத்­தத்­தின்­போது ஜேர்­ம­னியின் பேர்லின் நகரம் கைப்­பற்­றப்­பட்­ட­தாக சோவியத் யூனியன் அறி­வித்­தது.


1952 : ஜெட் இயந்­தி­ரங்கள் மூலம் இயங்கும் உலகின் முத­லா­வது விமா­ன­மான டி ஹாவா­லிலேன்ட் கொமட் விமானம் தனது முதல் பறப்பை லண்­ட­னி­லி­ருந்து ஜொஹான்னர்ஸ் பேர்க் நக­ருக்கு மேற்­கொண்­டது.


1969 : உலகின் மிகப்­பெ­ரிய பய­ணிகள் கப்­பல்­களில் ஒன்­றான “குயின் எலி­ஸபெத் 2” லண்­ட­னி­லி­ருந்து நியூயோர்க்­கிற்கு முத­லா­வது பய­ணத்தை ஆரம்­பித்­தது.


1982 : பாக்­லாந்து யுத்­தத்தில் ஆர்­ஜென்­டீன யுத்த கப்­ப­லான ஏ.ஆர்.ஏ. ஜெனரல் பெல்­கி­ரா­னோவை பிரித்­தா­னிய அணு­சக்தி நீர்­மூழ்­கி­யொன்று மூழ்­க­டித்­தது.


1989 : ஆஸ்­தி­ரிய எல்­லை­யி­லுள்ள தனது வேலையை ஹங்­கேரி அகற்றத் தொடங்­கி­யது. இதனால் பெரும் எண்­ணிக்­கை­யான கிழக்கு ஜேர்­ம­னி­யர்கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றினர்.

1994 : போலந்தில் இடம்­பெற்ற பஸ் விபத்தொன்றில் 32 பேர் பலி­யா­கினர்.


1994 : தென் ஆபி­ரிக்­காவில் இன­வெறி ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வரும் வித­மாக அனை­வ­ருக்கும் வாக்­கு­ரி­மை­ய­ளிக்­கப்­பட்டு நடத்­தப்­பட்ட பொதுத் தேர்­தலில், நெல்சன் மண்­டே­லாவின் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்சி வெற்றி பெற்­றது.


1998 : ஐரோப்­பிய மத்­திய வங்­கி­யா­னது பெல்­ஜி­யத்தின் தலை­நகர் பிர­சல்ஸில் திறக்­கப்­பட்­டது.


1999 : பனா­மாவின் முதல் பெண் ஜனா­தி­ப­தி­யாக மிரேயா மொஸ்­கோசோ தெரி­வானார்.


2000 : அமெ­ரிக்­காவில் படை­யி­ன­ருக்கு மாத்­திரம் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்த ஜி.பி.எஸ். கருவி பாவனை கட்­டுப்­பாடு நீக்­கப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பில் கிளின்டன் அறி­வித்தார்.


2008 : மியன்­மாரில் சூறா­வளி, மண் சரிவு கார­ண­மாக 138,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.  மில்­லியன் கணக்­கான மக்கள் வீடு­க­ளை­விட்டு இடம்­பெ­யர்ந்­தனர்.


2008 : சிலியில் எரி­ம­லை­யொன்று வெடித்­ததால் சுமார் 4500 பேர் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர்.


2011 : அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


2012 : ஆப்கானிஸ்தானின் பதாக் ஷான் மாகாணத்தில் இடம்பெற்ற மண் சரிவுகளில் சுமார் 2700 பேர் பலி.

Post a Comment

0 Comments