1519 : இத்தாலிய ஓவியர், சிற்பி, பொறியியலாளர் என பல்துறை விற்பன்னராக விளங்கிய லியனார்டோ டாவின்ஸி காலமானார்.
1536 : இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்றியின் மனைவியான ராணி ஆன் போலெய்ன் ஒழுக்கக்கேடு, தேசத்துரோகம், மாந்திரிக நடவடிக்கைளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
1933 : ஜேர்மனியில் தொழிற்சங்கங்களுக்கு அடோல்வ் ஹிட்லரினால் தடை விதிக்கப்பட்டது.
1936 : எத்தியோப்பிய மன்னர் ஹிலி செலாஸ்ஸி, நாட்டைவிட்டு வெளியேறினார்.
1945 : 2 ஆம் உலக யுத்தத்தின்போது ஜேர்மனியின் பேர்லின் நகரம் கைப்பற்றப்பட்டதாக சோவியத் யூனியன் அறிவித்தது.
1952 : ஜெட் இயந்திரங்கள் மூலம் இயங்கும் உலகின் முதலாவது விமானமான டி ஹாவாலிலேன்ட் கொமட் விமானம் தனது முதல் பறப்பை லண்டனிலிருந்து ஜொஹான்னர்ஸ் பேர்க் நகருக்கு மேற்கொண்டது.
1969 : உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்களில் ஒன்றான “குயின் எலிஸபெத் 2” லண்டனிலிருந்து நியூயோர்க்கிற்கு முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1982 : பாக்லாந்து யுத்தத்தில் ஆர்ஜென்டீன யுத்த கப்பலான ஏ.ஆர்.ஏ. ஜெனரல் பெல்கிரானோவை பிரித்தானிய அணுசக்தி நீர்மூழ்கியொன்று மூழ்கடித்தது.
1989 : ஆஸ்திரிய எல்லையிலுள்ள தனது வேலையை ஹங்கேரி அகற்றத் தொடங்கியது. இதனால் பெரும் எண்ணிக்கையான கிழக்கு ஜேர்மனியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.
1994 : போலந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 32 பேர் பலியாகினர்.
1994 : தென் ஆபிரிக்காவில் இனவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அனைவருக்கும் வாக்குரிமையளிக்கப்பட்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில், நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
1998 : ஐரோப்பிய மத்திய வங்கியானது பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் திறக்கப்பட்டது.
1999 : பனாமாவின் முதல் பெண் ஜனாதிபதியாக மிரேயா மொஸ்கோசோ தெரிவானார்.
2000 : அமெரிக்காவில் படையினருக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி பாவனை கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அறிவித்தார்.
2008 : மியன்மாரில் சூறாவளி, மண் சரிவு காரணமாக 138,000 பேர் உயிரிழந்தனர். மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்தனர்.
2008 : சிலியில் எரிமலையொன்று வெடித்ததால் சுமார் 4500 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
2011 : அல் கைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2012 : ஆப்கானிஸ்தானின் பதாக் ஷான் மாகாணத்தில் இடம்பெற்ற மண் சரிவுகளில் சுமார் 2700 பேர் பலி.


0 Comments