வேரஹெர பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலை, 20 விசேட சிகிச்சை நிலையங்கள், 814 கட்டில்கள் மற்றும் நவீன உபகரணங்களைக் கொண்ட முழு நிறைவான சர்வதேச தரம்வாய்ந்த வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையை திறந்துவைத்த ஜனாதிபதி, அங்குள்ள சிகிச்சை நிலையங்களை பார்வையிட்டதுடன், சிறுவர் வாட்டுக்கள் மற்றும் விசேட விருந்தினர் வாட்டுக்கள் தொகுதியையும் பார்வையிட்டார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அத்மிரால் ஜே.ஜே. ரணசிங்கவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ அபேகோன், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் அத்மிரால் தயா சந்தகிரி, உபவேந்தர் ரியர் அத்மிரால் ஜே.ஜே. ரணசிங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












0 Comments