சிலாபம் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 4 பெண்கள் நேற்று மாலை இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் , 21 வயதுடைய யுவதியொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறார்.
இவர்கள் சிலாபம் - இலிப்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
காணாமல் போன யுவதியை தேடி காவற்துறையினர் , கல்பிடிய கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments