Subscribe Us

header ads

தனக்கு தானே தண்டனை விதித்து கொண்ட துபாய் பொலீசின் நேர்மை




வளைகுடா நாடுகளில் குறிப்பாக துபை போக்குவரத்து போலீஸார் விதிகளை பின்பற்றுவது போல் பிறர் பின்பற்றுவது அரிதே. இவர்களின் கடந்தகால வரலாற்றில் சாலை விதிகளை மீறிய ஆட்சியாளர்களின் குடும்பத்தவரையே 'சட்டத்தை இயற்றிய நீங்களே மதிக்காவிட்டால் வேறு யார் மதிப்பார்?' என துணிவாக கேள்வியெழுப்ப அதற்கு அவர்கள் கட்டுப்பட்டு சென்றதும் அனைவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி.


துபையில் சாலை ஓர பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த எகிப்திய மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான காரை எதிர்பாராவிதமாக போலீஸ் வாகனம் ஒன்று இடித்தது. அதிலிருந்த போலீஸ்காரர் 'கார்ப்போரல்' அப்துல்லாஹ் முஹமது இபுராஹீம் என்பவர் உடனடியாக விபத்து நேர்ந்தால் பிறருக்கு வழங்குவது போலவே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு தனக்கு எதிரான ஒப்புகை சீட்டை சேதமடைந்த மருத்துவர் காரின் கண்ணாடி பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

ஓப்புகை சீட்டை படித்து விஷயமறிந்த எகிப்திய மருத்துவர் அந்த போலீஸாரின் நேர்மையை பாராட்டி சமூக வலைத்தளங்களில் செய்தியை பதிய வைரலானது. இந்த சமூக வலைத்தள செய்தி துபை போலீஸாரின் தலைமையகத்தை எட்ட, சம்மந்தப்பட்ட போலீஸ்காரர் மற்றும் எகிப்திய டாக்டர் ஆகியோரை அழைத்துப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியதுடன் கூடுதலாக போலீஸாருக்கு பதவி உயர்வையும் வழங்கியுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்:அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments