Subscribe Us

header ads

ட்ராபிக் இல்லை ; கொழும்பில் இனி தனியான வழிப்பாதை

நேரம் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியமானதொன்று. நேரம் பொன்னானது.
கொழும்பில் வாகன நெரிசல் அதிகரிப்பு வழமையானதொன்று.  இந்த வாகன நெரிசலால் பலருக்கு நேரத்திற்கு வேலைக்கு பாடசாலைக்கு அலுவலகத்திற்கு முக்கியமான இடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இழக்கப்படுகின்றது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரச்சினைகளும் வேலைப்பளுக்களும் அதிகரிக்கக்கூடும்..
இப்போது இந்த பிரச்சினைகளிலுருந்து விடுபடவும் வாகன நெரிசலை தடுக்கவும் கொழும்பில் புதிய போக்குவரத்து நடைமுறை அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இதற்கமைய பேருந்து போக்குவரத்திற்காக தனியான வழிப்பாதையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்காக நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் முதல் கட்டமாக ராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரை உள்ள வீதியில் இந்த திட்டம் அறிமுகமாகவுள்ளது .அடுத்த கட்டமாக கொழும்பிலுள்ள ஏனைய வீதிகளுக்கும் புதிய வழிப்பாதை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டம் சிங்கப்பூர் கொரியா போன்ற நாடுகளின் போக்குவரத்து முறைமைக்கு அமைவாக கொழும்பிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதனால் பயணிகளுக்கு இலகுவான சிறந்த முறையில் போக்குவரத்து அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட வாகனங்களை திரும்புவதற்கான ஒதுக்கப்பட்ட வழிப்பாதை ஒன்றை உரிய முறைக்கமைய பயன்படுத்த வேண்டியிருக்கும் அதனால் அதற்கமைய வரைபடம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
பச்சை நிறத்திலுள்ள குறியீட்டில் மட்டுமே பேருந்துகள் செல்லவேண்டுமென்றும் மற்றைய நிறத்திலுள்ள குறியீட்டில் தனிப்பட்ட வாகனங்கள் பயணிக்க முடியும் என்றும் ,கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments