Subscribe Us

header ads

மஹிந்தவின் பாரிய ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு

பாரிய ஊழல் மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்று பதிவு செய்துக் கொள்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, எதிர்வரும் 16ஆம் திகதி வருகைத்தருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் பிரச்சார நடவடிக்கை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய தேசிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 1642 இலட்சம் ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை. அது தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்காக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments