அவுஸ்திரேலிய மண்ணில் T 20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, வெற்றிக்களிப்புடன் நாடு திரும்பியுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த உபுல் தரங்க தலைமையிலான இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடிய இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் போட்டியை தனதாக்கியது.
பல போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி சோபிக்க தவறியமை காரணமாக விரக்தியில் இருந்த ரசிகர்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளனர்.
0 Comments