அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது வெள்ளை மாளிகையில் பணியமர்த்தப்பட்டவர் ருமானா அஹமது.
டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின் 8 நாட்களில் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது...
நான் கடந்த காலத்தில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்புப் பிரிவில் ஒரு பர்தா அணிந்த ஒரு பெண்ணாய் பெரும் கௌரவத்துடன் நியமிக்கப்பட்டேன்.
வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் என்னைக் கண்ணியப்படுத்தினார்கள். பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.
ஒபாமா சலாம் சொல்வார். இன்று அனைத்தும் தலை கீழாய் மாறிவிட்டது.
கடந்த காலங்களில் ட்ரம்ப் வெளியிட்டுவந்த நச்சுக் கருத்துக்கள் தொடர்பிலும் நான் அவதானமாய் இருந்தேன். எனினும், ட்ரம்ப் பதவியேற்ற பின் எட்டு நாட்கள் நான் வெள்ளை மாளிகையில் தாக்குப்பிடித்தேன்.
என்னால் முடியுமான தேசிய நலனுக்கான நற்சேவையை தொடர வேண்டும் என்றே இருந்தேன். எனினும் அதிபர் ட்ரம்பின் முஸ்லிம் விரோத போக்கு என்னை பெரிதும் பாதித்தது.
என் சமூகத்தை இழிவுப்படுத்தும் இடத்தில் நான் பணியாற்ற விரும்பவில்லை, எனவே பணியிலிருந்து விலகினேன் என்றார்.
0 Comments