பொலிஸ்மா அதிபர் எனும் பெயரில் போலியான Face book கணக்கு ஒன்றை ஆரம்பித்து, பொலிஸ் மா அதிபர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, யுவதி ஒருவரை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் யுவதி ஒருவரால் குற்றவியல் விசாரணைகள் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைய, விசாரணைகள் மூலம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு போலியான பேஸ்புக் கணக்கினை நியூசிலாந்தில் இருக்கும், வீரசேகர ஆரச்சிகே ரஜித மதுசான் எனும் நபரே, இவ்வாறு குறித்த யுவதியை ஏமாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து, குறித்த நபர் இலங்கை வந்துள்ள சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக குற்றவியல் விசாரணைகள் பிரிவு தெரிவித்தது.
சந்தேக நபர் கொழும்பு கோட்டை முதன்மை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து, 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments