பி. முஹாஜிரீன்
சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (08)நடைபெற்ற அக்கரைப்பற்று இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். காஸிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மாணவர்கள் 'பிள்ளைகள் தினமும் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்துவோம், எமது எதிர்காலத்தின் முதலீடு கல்வியாகும், எமது சமூகத்தின் எழுச்சியை கல்வியினூடாக முன்னெடுப்போம், அன்புள்ள பெற்றோர்களே எமது கல்வியில் எப்போதும் கருத்தாயிருங்கள், கல்வியே எமது சுபீட்சமான வாழ்விற்கு வழியமைக்கும், கல்வியில் இடைவிலகியோரை மீண்டும் பாடசாலையில் இணைப்போம், கல்விக்கான தடைகளைத் துடைத்தெறிவோம், எமது எதிர்காலம் கல்வியே' போன்ற பதாகைகளையும் சுலோகங்களையும் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டதோடு, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களது பெற்றோர்களைச் சந்தித்து அவர்களை பாடசாலையில் இணைக்குமாறும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி. பஸ்மில், முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். லாபீர், ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ. அன்சார் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments