யாசகம் கேட்டு வருபவர்கள் ஊரில் இருக்கும் பொது நிறுவனம் ஏதாவது ஒன்றில் (உ+ம் - போலிஸ், நகர சபை) ஆட்பதிவு செய்து அந்த நிறுவனத்தின் கடிதம் பெற்று வரவேண்டும். அவ்வாறு கடிதம் பெற்று வராதவர்களை காவல் துறையிடம் பிடித்து கொடுத்து அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அல்லது கடிதம் கொண்டு வராதவர்களுக்கு யாசகம் வழங்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது கெட்டவர்களிடம் இருந்து எமது ஊரையும் பிள்ளைகளையும் பாதுகாக்க முடியும்.
இதை விட நல்ல ஆலோசனைகள் ஏதும் இருந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு அறிவித்து ஊரின் பாதுகாப்பை உறுதி படுத்துவோம்.
நேற்று புத்தளத்தில் இடம்பெற்ற குழந்தை கடத்தல் சம்பவத்திலிருந்து பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்...அத்தோடு மட்மில்லாமல் பெற்றோர்களாகிய நீங்கள் சிறு பிள்ளைகளை கடைகளுக்கு தனியே அனுப்பாமல் சக பாதுகாப்பாளர்களுடன் அனுப்பி இது போன்ற விடயங்களில்லிருந்து தவிர்ந்துகொள்ளுங்கள்...
Mohamed Nibras
0 Comments