பைஷல் இஸ்மாயில் -
ஆங்கில வைத்தியமுறைமை விட ஆயுர்வேத வைத்தியமுறைமையைத்தைத்தான் இன்று சர்வேதேச ரீதியாக எல்லோரும் விரும்புகின்றார்கள். என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல். முஹம்மட் நசீர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வைத்தியர்களின் பங்குபற்றலுடன் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இலவச நிபுணத்துவ வைத்திய நடமாடும் சேவை இன்று (20) வைத்திய அத்தியட்சகர் கே.எல். நக்பர் தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாடளாவிய ரீதியில் உள்ள மக்கள் மிக அதிக அதிகமாக ஆயுர்வேத வைத்தியத்தையே நாடுகின்றனர். விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் ஆயுர்வேத வைத்தியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல முன்னெடுப்புக்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் முன்னெடுத்து வருகின்றது. அதற்கான சகல அபிவிருத்தி திட்டங்களையும் வைத்திய சேவைகளையும் வழங்க வேண்டும் எனபதற்காக எமது நாட்டின் ஜனாதிபதி 100மில்லியம் ரூபாவை விஷேடமாக ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்.
எமது மூதாதையர்கள் மிக அதிகமாக நாட்டு வைத்தியங்களை மேற்கொண்டு அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணிவந்தனர். அது மாத்திரம் அல்லாமல் தங்களது உணவு வகைகளை நஞ்சற்ற உணவாக உற்கொண்டுவந்தனர். இன்றுள்ளவர்கள் அவ்வாறில்லாமல் தங்களின் நோய்கள் குணமடைவதற்காக ஆயுர்வேத வைத்தியமுறைமையினை நாடி உணவு பழக்கங்களையும் மாற்றி தங்களின் அன்றாட வாழ்க்கையை நடாத்தி வந்ததால் இன்று பலர் நோயாளிகளாக காணப்படுகின்றனர்.
அதன் பின்னர் ஆங்கில வைத்தியம் உலகில் அதிகரித்ததைத் தொடர்ந்து மக்கள் ஆயுர்வேத வைத்தியத்தை முற்றுமுழுதாக மறந்து ஆங்கில வைத்தியத்தில் மூழ்கினர். இப்போது மக்கள் மிக அதிகமாக ஆயுர்வேத வைத்திய முறைமையினை மீண்டும் நாடிவருகின்றனர். அதற்காக ஆயுர்வேத துறையை முன்னேற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது. அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.
இதனைக்கருத்திற்கொண்ட எமது அமைச்சு விஷேட முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது. அதன் மூலம் ஆயுர்வேத வைத்தியத்தியத்துறையை பரப்பி மக்களின் நோய்களை இலகுவான முறையில் தீர்ப்பதற்கும் நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றோம் என்றார்.
ஆயுர்வேத வைத்தியத்துறையில் அதிக நிபுணத்துவம் உள்ள ஓர் நாடாக கொரியா இருந்து வருகின்றது. அதில் பிரசித்து பெற்ற நாட்டு வைத்தியர்களை அழைத்து இன்றும் (20) நாளையும் (21) அட்டாளைச்சேனையில் மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் 1873 பேர் சிகிச்சை பெற்றுச்சென்றனர். இதில் கொரியன் அக்கியுப் பஞ்சர் 220 பேரும், பொதுவைத்திய சிகிச்சைகளை 950 பேரும், மொக்ஸி பிஸன் வைத்திய சிகிச்சைகளை 110 பேரும், தோல் நோய் சிகிச்சைகளை 420 பேரும், காது, மூக்கு, தொண்டை ஆகிய நோய்களுக்கான சிகிச்சைகளை 173 பேரும் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
இச்சிகிச்சைகளை அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திராய்க்னேணி, அக்கரைப்பற்று, பொத்துவில், நிந்தவூர், திகவாபி, அம்பாறை, மகஓயா, மற்றும் தெஹியத்தைக்கண்டி போன்ற பிரதேசங்களில் இருந்து வந்த மக்களே மேற்குறித்த சிகிச்சைகளை பெற்றுச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாபெரும் நடமாடும் சேவைக்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், மு.காவின் ஸ்தாபக செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபுர், பொரளை போதனா ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
0 Comments