புத்தளம் பிரதேசத்தையும் அணிமித்த பிரதேசங்களையும் சேர்ந்த இளம் யுவதிகளுக்கும் ஆண்களுக்குமான பெரும் தொழில்வாய்ப்பு.
தொழில் அனுபவம் இல்லாத இளைஞர்களையும் தொழில் அனுபவம் உள்ளவர்களையும் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அற்ற இளைஞர்கள் அனைவரையும் பங்குபற்றி நன்மை அடையுமாறு புத்தளம் பிரதேச செயலகமும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பும் அழைப்பு விடுக்கின்றன.
காலமும் இடமும்
எதிர்வரும் வியாழக்கிழமை 12ஆம் திகதி காலை 08.30 மணி முதல் பகல் 12.30 வரை புத்தளம் நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு?
G.C.E O/L, G.C.E A/L மற்றும் ஏதாவது தொழிற்பயிட்சியை நிறைவு செய்தவர்களுக்கு. G.C.E O/L பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கும் வாய்ப்புக்கள் காத்திருக்கின்றன.
அவசியம்
பங்குபற்றுவோர் தங்களின் சுயவிபரக் கோவையை (Bio data) கொண்டு வருவது அவசியம்.
தொழில் வழங்குனர்கள்.
கீல்ஸ் சுபர், ஹேலீஸ் கம்பனி, பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட், டூ பால், காப்புருடிக்கொம்பனிகள், உள்ளூர் தனியார் கம்பனிகள் பங்குபற்றவுள்ளனர்
வாய்ப்புக்கள்
தொழில்வாய்ப்பு
NVQ சான்றிதழுடன் கூடிய தொழிற்பயிட்சி
பயிற்ச்சியை தொடர்ந்து தொழில் வாய்ப்பு
ஏற்பாட்டாளர்கள்
புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பும் (IOM) புத்தளம் பிரதேச செயலகமும் இணைந்து ஒழுங்கு செய்த நிகழ்வு.
மேலதிக தகவல்களுக்கு
011 532 5362 அல்லது 077 441 0086 இலக்கத்தை சுழற்றுங்கள்
இத்தகவலை சமூக வலைத்தளங்கள் மூலமும் வாய்மொழியாகவும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
-Imthath Basar-



0 Comments