Subscribe Us

header ads

திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்த கணவர்.! காரணம் இதுதான்...


அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார்.
சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஹொட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் கையடக்கதொலைபேசியில் (சாட்) உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடன் பேச மணமகன் விரும்பினார். அதை மணமகள் கண்டுகொள்ளவில்லை. கையடக்கதொலைபேசியில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் பதில் தெரிவிப்பதாக கூறினார்.
உடனே மணமகன் உனக்கு நான் முக்கியம் இல்லையா? என்று கேட்டார். அதற்கு ஆம் என மணமகள் பதில் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு ஹொட்டலை விட்டு வெளியேறினார்.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்ட திருமணபந்தம் கையடக்கதொலைபேசி உரையாடலால் அது ஏற்பட்ட மறுநிமிடமே முடிந்து விட்டது.

Post a Comment

0 Comments