உலகில் இரகசிய கணக்குகள் உள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பனாமா இரகசிய கணக்குகள் வெளியான தகவல்கள் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளதாக அந்த பத்திரிகையின் செய்திகள் தெரிவிக்கின்றது.
உலகில் பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் பதுக்கி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கணக்குகள் தொடர்பான தகவல்களை கொண்டு ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை உலகின் இரகசிய நிறுவனங்கள் என்ற தலைப்பின் கீழ் வரைபடமொன்றை தயாரித்துள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடங்குவதுடன், மூன்று நிறுவனங்களுக்கு சொந்தமான மூன்று வாடிக்கையாளர்கள் மற்றும் 22 பங்குதாரர்கள் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் உட்பட உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களின் பெயர்கள் குறித்த கணக்கில் உள்ளடங்குகின்றதா என உடனடியாக கண்டுபிடிக்க அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



0 Comments