Subscribe Us

header ads

மஹிந்தவைப் பாதுகாக்க 1000 பேர் கொண்ட ஓய்வுபெற்ற இராணுவ படையணி!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பணியில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆயிரம் பேரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேதினத்தின் பின்னர்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.
பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் அவரின் பாதுகாப்பு பணிகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மஹிந்த தரப்பிலிருந்து இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஆயிரம் பேரை மஹிந்தவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மஹிந்தவின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக செயற்படவுள்ளனர்.

Post a Comment

0 Comments