அன்புச் சகோதரியே,
இசுலாமிய பிரச்சாரகர்கள் உனது வருகையால் பிசியாகி விட்டார்கள் உனது ஒவ்வொரு நகர்வையும், நடத்தையையும் கூர்மையாகப் பார்த்து விமர்சிப்பதில் ஆழமான ஆராய்ச்சியில் மூழ்கி விட்டார்கள்
உலமாக்கள் மிக நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு வந்த குத்து விளக்குக்கு மத நம்பிக்கையா? கலாச்சாரமா? பதுவா வழங்க போதுமான ஆதரங்களைத் தேடுகிறார்கள்
பெண்கள்/ இளசுகள் இஸ்லாமிய வரையறைகளைப் பேணி பாரம்பரிய மரபு முறைகளில் இருந்து வெளியே வந்து தம்மால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள், உனது வரலாற்றுப் பக்கங்களைத் தேடி படிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
களனி பல்கலைக் கழக பேராசிரியர்கள்/ விரிவுரையாளர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் எம்மால் கொடுக்க முடியாமல் போன இஸ்லாத்தின் பரப்பைப் பற்றி ஆங்காங்கே தேடித் படிக்கத் தயாராகி விட்டார்கள்
நீ உனது பாதையில் முன்னேறிக் கொண்டே இரு ஒவ்வொரு நடத்தையிலும் மார்கத்தின் வரையறைகளைப் பேணிக்கொள்
நாம் எப்பவும் பிசியாகவே இருக்கிறோம் மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சி முடியும் வரை ...
அபூ அப்ஹம்
24.03.2016


0 Comments