பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலையே பலியாகினர்.
இச்சம்பவம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் நேற்று பி ப 2-30 மணியளவில் .இடம்பெற்றது.
இதன் போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்த இரு இளைஞர்களும் வேக கட்டுப் பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகினர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
0 Comments