Subscribe Us

header ads

வரலாற்றில் முதல் முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு ஏறும் இலங்கையர்கள்!


இலங்­கையில் முதன் முத­லாக மலை­யேறும் வீரர்­க­ளான ஜயந்தி குரு மற்றும் ஜோன் பீரிஸ் ஆகியோர் எவரெஸ்ட் சிக­ரத்தின் உச்­சிக்கு ஏறும் பய­ணத்தை ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.
இது­வ­ரையில் எவரெஸ்ட் மலை உச்­சிக்கு இலங்­கை­யர்­க­ள் எவரும் ஏறி­ய­தில்லை. இந்­நி­லையில் இலங்கை வர­லாற்றில் புதிய பெயரைப் பதி­வ­தற்­கான இந்த சாதனை முயற்­சியில் கள­மி­றங்­கி­யுள்­ளனர் இவர்கள்.
8488 மீற்றர் உய­ர­மான எவரெஸ்ட் மலையின் உச்­சிக்கு ஏறும் பய­ணத்தை எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்­பிப்­ப­தற்கு அவர்கள் திட்­ட­மிட்டுள்­ளனர்.
எவரெஸ்ட் மலைச் சிக­ர­மா­னது இமய மலைத் தொடரின் ஒரு பகுதி. இது நேபாளம் மற்றும் திபெத்தில் அமைந்­துள்­ளது. இந்த எவரெஸ்ட் மலை உச்­சியே உலகின் அதி உய­ர­மான சிக­ர­மாகத் திகழ்­கின்­றது. இந்த மலை உச்சியை வெற்­றி­க­ர­மாக அடைந்­த­வர்கள் சிலரே.
ஜயந்தி குரு உடும்­பல என்ற வீராங்­கனை மலை ஏறும் வீர­ாங்க னையாக திகழ்­வ­துடன் 2003ஆம் ஆண்டு தொடக்கம் தொழில் ரீதி­யான மலை ஏறி­யாக அறி­யப்­ப­டு­கின்றார். இந்தப் பயணம் குறித்து கருத்து தெரி­வித்த ஜயந்தி, எவரெஸ்ட் மலைக்கு ஏறு­வ­தென்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். எமக்கும் அது தெரியும். ஆனாலும் நம்­பிக்­கையை அதி­க­மாக நாம் கொண்டு செல்­கிறோம். மலை ஏறு­வ­தற்கு எவ்­வ­ளவு சக்தி அவ­சி­யமோ அதே­அள­வான சக்தி இறங்­கு­வ­தற்கும் அவ­சியம். எது எப்­ப­டியோ எமது இந்தப் பய­ணத்தை நாம் வெற்­றி­க­ர­மாக முடித்துக் காட்­டுவோம் என்றார்.

இது குறித்து ஜோன் பீரிஸ் கருத்து தெரி­விக்­கையில், நானும் ஜயந்­தியும் பல பிற சிக­ரங்­களை ஒன்­றாக ஏறி இருக்­கிறோம். இறுதி இலக்­கான எவரெஸ்ட் மலைச்சிக­ரத்தை வெற்றி கொள்வ­தற்­காக இரு­வரும் ஒன்றாகப் புறப்­ப­டுகின்றோம்.
எவரெஸ்ட் உச்­சிக்கு செல்­ல­வுள்ள முத­லா­வது இலங்­கை­யர்கள் என்ற கௌர­வத்தை நாங்கள் பெரு­மை­யாகக்
கரு­து­கின்றோம். நாட்டிற்காக புதிய சாதனை வரலாறு ஒன்றை படைப்பதற்காக எம்மை நாமே உந்தித் தள்ளுகின்ற இந்த வாய்ப்பினை எண்ணி நாம் மகிழ்கின்றோம் என்றார்.

Post a Comment

0 Comments