Subscribe Us

header ads

வலய கல்வி இயக்குனரை தாக்கியதாக கூறி இன்று புத்தளத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


வலய கல்வி இயக்குனரை மாகாண சபை உறுப்பினர் தாகிர் அவர்கள் நேற்று தாக்கியதாக கூறி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது...

கல்வி அலுவலகத்தைச் சேர்ந்தோர் மற்றும் சகல பாடசாலை அதிபர்களும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்...தாகிர் அவர்களை கைது செய்யும்படி போலீஸ் பொறுப்பதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது...இவ்விடயம் சம்பந்தமாக வருகை தரவிருந்த மாகாண கல்வி அமைச்சர், பின்னர் தனது விஜயத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்...

அதே நேரம், கல்வி பணிப்பாளர் ஓர் SLES தரம் வாய்ந்தவர் என்பதால் அவரைச் சார்ந்தோர் கொழும்பில் பிக்கேட்டிங் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்...

ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் புத்தளம் ASP அலுவலகத்தின் முன்பாக அணி திரண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடதக்கது...

-Ibrahim Nihirir-

















Post a Comment

1 Comments

  1. புத்தளமும் அழிவுப் பாதையை நோக்கி நகர்கிறதா என சிந்திக்க வேண்டிய நேரமிது.

    ReplyDelete