Subscribe Us

header ads

நாமல் ராஜ­பக்­சவுக்கு இதெல்லாம் நினைவில்லையா….? பொன்­சேகா மகள் சாட்டை…..

எங்கள் குடும்பம், தாஜூ­தீனின் பெற்றோர், பிரகீத் குடும்பம் எவ்­வாறு துய­ர­டைந்­தி­ருக்கும்…..
முன்னாள் ஜனா­தி­ப­தியின் மூத்த புதல்வர் நாமல் ராஜ­பக்ச தனது பெற்­றோர்கள் கண்ணீர் விடு­வதை தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை என கவலை வெளி­யிட்­டுள்ளார்.
கொல்­லப்­பட்­ட­வர்­களின் பல குடும்­பங்கள், தந்­தைமார், பெற்றோர்,குழந்­தைகள் அழு­தது நினைவில் இல்­லையா? என்று முன்னாள் இரா­ணுவ தள­பதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் மகள் அப்­சரா பொன்­சேகா தனது முகப்­புத்­த­கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், எங்கள் குடும்பம் எப்­படி துய­ர­டைந்தோம், தாஜூ­தீனின் பெற்றோர் எவ்­வாறு துய­ர­டைந்­தி­ருப்பர், பிரகீத் குடும்பம் எவ்­வாறு துய­ர­டைந்­தி­ருக்கும் என்­பதை நாமல் உண­ரட்டும், இந்தக் கணமே அவ­ரது குடும்­பத்­தினர் அவர்­க­ளிற்கு துணிச்­ச­லி­ருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தரு­ண­மாக அமை­யட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
அவ­ரது அர­சாங்கம் இந்த நாட்டின் சட்­டத்­தினை மதிக்கும் அதற்கு கட்­டுப்­படும் அப்­பாவி மக்கள் மீது கட்­ட­விழ்த்­து­விட்ட அவ­லத்தை , அவ­மா­னத்தை, அநீ­தியை ஒரு­போதும் மறக்க முடி­யாது.
நாட்டில் தற்­போது சரி­யான கார­ணங்­க­ளிற்­காக செயற்­படும் நடை­முறை காணப்­ப­டு­வ­தற்கும் , சட்டம் எந்­த­வித தலை­யீ­டு­களும் இன்றி செயற்­ப­டு­கின்­ற­மைக்கும், நள்­ளி­ரவில் மக்கள் வெள்­ளை­வானில் கொண்டு செல்­லப்­படும் நிலை இல்­லா­த­மைக்கும் நாமல் ராஜ­பக்­சவும், அவ­ரது குடும்­பத்­தி­னரும் நன்றி தெரி­விக்­க­வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments