Subscribe Us

header ads

சிங்க லேயுடன் பொலிஸார் தர்க்கம்!

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று சிங்க லே( சிங்க இரத்தம்) அமைப்பினர் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இதற்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் மோட்டார் பவனியாக அந்த அமைப்பினர் சென்றிருந்தனர்.

இவர்கள், கடந்த காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சிறுபான்மையினரை தவிர்க்கும் தேசியக்கொடிகளையும் பௌத்த கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை கொழும்பில் இருந்து சென்று இவர்கள் பிற்பகல் 2மணியளவில் மாவனல்ல நகரை அண்மித்த போது அங்கும் கூட்டம் ஒன்றை நடத்த முயன்றனர்

எனினும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்ற பொலிஸாரின் எச்சரிக்கையை அடுத்து அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர்கள் கண்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

Post a Comment

0 Comments