Subscribe Us

header ads

ரவுப் ஹக்கீம் 'அபித் சிங்ஹ லே' (நாங்களும் சிங்க லே) ஸ்டிகர் வெளியிட உத்தேசம்

சில குழுக்கள் நாட்டு மக்­க­ளி­டையே அச்ச நிலையை உரு­வாக்கி அர­சியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றன. சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்­டி­யுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­யகம் தாருஸ்­ஸலாமில் நேற்­றுக் காலை நடை­பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் நிறு­வி­யுள்ள புதிய தொழிற் சங்­க­மான தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்­கத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்­கத்தின் தலை­வ­ராக பத­வி­யேற்­றுள்ள அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

சிங்ஹ லே’ போன்ற ஸ்டிக்கர் குழுக்­க­ளினால் நாம் பீதிக்­குள்­ளாக வேண்டியதில்லை. நாட்டில் இன­வா­தத்தை உரு­வாக்க முயற்­சித்த குழுக்­க­ளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் கடந்த காலங்­களில் என்ன நடந்­தது என்­பது அவை­ருக்கும் தெரியும். அப்­ப­டி­யா­ன­வர்கள் மீண்டும் இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்பற்றிக் கொள்­ளலாம் என்று நினைப்­ப­தென்றால் அது தவ­றாகும்.

தற்­போது சிங்ஹ லே’ ஸ்டிக்­கர்­க­ளினால் தேவை­யற்ற பீதியை உரு­வாக்கி வருகிறார்கள். இது தொடர்­பாக இன்­று­வரை நான் வாய் திறக்­க­வில்லை. வாய் திறந்­தி­ருந்தால் என்னை இன­வா­தி­யென்றும் நான் இன­வா­தத்தைப் பரப்­பு­வ­தா­கவும் தவ­றான கருத்­து­களைப் பரப்­பு­வார்கள்.

இத­னா­லேயே வாய் திறக்­க­வில்லை. சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்­க­ருக்குப் பதிலளிக்கும் முக­மாகஅபித் சிங்ஹ லே’ (நாங்­களும் சிங்ஹ லே) என்ற ஸ்டிக்கரை வெளி­யி­டலாம் என்றும் எண்­ணி­யி­ருந்தேன். இது அர­சியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­யாகும்.

கிறிஸ் மனிதன் கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் கிறீஸ் மனிதன் (கிறீஸ் யகா) சம்­ப­வங்கள் மக்­களை பெரும் பீதிக்­குள்­ளாக்­கின. இந்த சம்­ப­வங்கள் ஏன் நடந்தன என்று இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இதற்­கான காரணம் அறியப்படவில்லை.

தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபித்துள்ள தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்கம் மறைந்த எமது தலைவர் அஷ்­ரபின் கன­வாகும். தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தேவை 1999 லிருந்து பேசப்பட்டு வந்­தது. இன்று அது ஒரு தொழிற்­சங்­க­மாக நிறை­வே­றி­யுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை ஒரு இன­வாதக் கட்சி என்றே கூறு­கி­றார்கள். இதி­லி­ருந்தும் பிறழ்வுற்ற முஸ்லிம் காங்­கிரஸ் இன­வாதக் கட்­சி­யல்ல என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கா­க­வுமே இந்த புதிய தொழிற்­சங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. சாதிசமயமொழி பேதங்­க­ளற்ற ஒரு புதிய அர­சியல் கலா­சாரம் இந்த தொழிற்­சங்கம் மூலம் உரு­வாக்­கப்­படும்.

A.R.A. Fareelc

Post a Comment

0 Comments