இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனும் அரசாங்கத்துக்கு பக்கபலமாகவே இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரே தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கிறார்.
ஜே வி பியும் அரசாங்கத்தை விமர்சிப்பதைப் போன்று அரசாங்கத்தின் பக்கமே இருக்கிறது.
ஜே வி பி கேள்வி எழுப்பும் போது, அரசாங்கம் அதற்கு பதில் வழங்குகிறது.
இது ஒரு திட்டமிட்ட நடைமுறையாக காணப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் யோசித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமையானது, தம்மை பழிவாங்குவதற்கான செயல் என்றும் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
நான்காம் திகதிக்கு முன்னர் இரண்டு ராஜபக்ஷவினரை கைது செய்யவிருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன போன்றோர் கூறி இருந்ததாகவும், இதன்படியே இந்த கைது இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments