Subscribe Us

17 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை..!


சிலாபம் - பல்லம – வில்பத பகுதியில் 17 வயது பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் ஆரம்ப மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் சிலாபம் - பல்லம பிரதேசத்தின் வீடொன்றில் அவரது கணவர் என தெரிவிக்கப்படும் நபருடன் இரண்டு வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில குறித்த பெண் நேற்று அந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறையினர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தனர்.

Post a Comment

0 Comments