Subscribe Us

header ads

குழந்தையின் பிறந்த தினத்துக்காக கேக் தயாரிப்பு பொருட்களை திருடிய பெண்ணை கைது செய்யாமல் தானே பணத்தை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்

கடை­யொன்றில் பொருட்­களை திரு­டிய பெண்­ணொ­ரு­வரை கைது செய்ய சென்ற அமெ­ரிக்க பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர், அப்பெண் தனது குழந்­தையின் பிறந்த தினத்­துக்கு கேக் செய்­வ­தற்­காக அப்­பொ­ருட்­களை திரு­டினார் என்­பதை அறிந்­த­வுடன் மேற்­படி பொருட்­க­ளுக்­கான பணத்தை செலுத்­தி­விட்டு திரும்பி வந்­துள்ளார்.

நியூ ஹாம்ப்­ஷயர் மாநி­லத்­தி­லுள்ள போர்ட்ஸ்மௌத் நக­ரி­லுள்ள கடை­யொன்றில் கேக் தயா­ரிப்­புக்­கான பொருட்­களை பெண்­ணொ­ருவர் திரு­டி­ய­போது அகப்­பட்­டுக்­கொண்டார்.  

இது தொடர்­பாக போர்ட்ஸ்மௌத் நகர பொலி­ஸா­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, மைக்கல் கோட்­ஸோனிஸ் எனும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் அப்­பெண்ணை கைது செய்­வ­தற்­காக அனுப்­பப்­பட்டார். 

ஆனால், வறிய நிலை­யி­லுள்ள 19 வய­தான அப்பெண் தனது குழந்­தையின் பிறந்த தினத்­துக்கு கேக் தயா­ரிப்­ப­தற்­காக அப்­பொ­ருட்­களை திரு­டி­யதை அறிந்து பரி­தாபம் கொண்டார். 

அதனால், அப்­பெண்ணை கைது செய்­யாமல், மேற்­படி பொருட்­க­ளுக்­கான பணத்தை கோட்­ஸோ­னிக்கே செலுத்­தினார்.

போர்ட்ஸ்மௌத் நகர பொலிஸார் இத்­த­க­வலை தெரி­வித்­துள்­ளனர். ஆனால், கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக இவ்­வாறு செய்­ய­வில்லை எனவும் தனது சக பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இவ்­வா­றான  கரு­ணை­யான செயற்­பா­டு­களில் அடிக்­கடி ஈடு­ப­டு­வ­துண்டு எனவும்  மைக்கல் கோட்­ஸோனிஸ் தெரி­வித்­துள்ளார்.

“பொருட்­களை திரு­டு­வது சரி­யா­ன­தல்ல. ஆனால், அதற்­கான விலையை ஒரு குழந்தை செலுத்த நேரி­டக்­கூடாது” என அவர் கூறி­யுள்ளார்.



“மேற்­படி கடை ஊழியர் ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில், “மோச­மான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் குறித்த பல கதை­க­ளுக்கு மத்­தியில், இந்த கதை உங்­க­ளுக்க மிக மகிழ்ச்­சி­ய­ளிக்கும்  என நம்­பு­கிறேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

Post a Comment

0 Comments