1609 : இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.
1864 : இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
1881 : ஆஸ்திரியாவில் வியன்னா நகரில் அரங்கொன்றில் ஏற்பட்ட தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
1912 : அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஒட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
1941 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
1941 : பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பானுக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்தது.
1941 : ஜப்பானுக்கு எதிராக சீனக் குடியரசு போர் பிரகடனம் செய்தது.
1941 : பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
1941 : பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயு பஸ்ஸை பயன்படுத்தினர்.
1942 : யுக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாஸி ஜேர்மனியர்கள் அங்கிருந்த 1,400 பேர் கொண்ட கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
1953 : அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனோவர் அறிவித்தார்.
1963 : அமெரிக்காவின் மேரிலாந்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.
1966 : கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1969 : கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
1972 : அமெரிக்காவின் சிக்காகோவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
1980 : பிரபல பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜோன் லெனன் நியூயோர்க்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1982 : சூரினாமில் இராணுவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
1985 : இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1987 : பெருவின் தலைநகர் லீமாவுக்கு அருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த பெருவின் கால்பந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1991 : சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், யுக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
1998 : அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2009 : ஈராக்கின் பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 127 கொல்லப்பட்டனர்.
2013 : சிங்கப்பூரில் பஸ் விபத்து ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இரு மணித்தியாலயங்கள் பாரிய வன்முறைகள் இடம்பெற்றன. 1969 ஆம் ஆண்டின் பின்னர் சிங்கப்பூரில் இடம்பெற்ற இத்தகைய முதலாவது வன்முறை இதுவாகும்.


0 Comments