Subscribe Us

வரலாற்றில் இன்று.... டிசம்பர் - 08

1609 : இத்­தா­லியின் மிலான் நகரில் அம்­பு­ரோ­ரி­யானோ நூலகம் திறக்­கப்­பட்­டது. இதுவே ஐரோப்­பாவின் இரண்­டா­வது பொது நூலகம் ஆகும்.

1864 : இங்­கி­லாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்­கப்­பட்­டது.

1881 : ஆஸ்­தி­ரி­யாவில் வியன்னா நகரில்  அரங்­கொன்றில் ஏற்­பட்ட தீயினால் 620 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1912 : அல்­பே­னி­யாவின் "கோர்சே" நகரை ஒட்­டோமான் படை­யிடம் இருந்து கிரேக்­கர்கள் கைப்­பற்­றினர்.

1941 : இரண்டாம் உலகப் போர்: ஜப்­பா­னி­யர்கள் ஹொங்கொங், மலாயா ஆகி­ய­வற்றைத் தாக்­கினர்.

1941 : பசிபிக் போர்: பேர்ள் துறை­மு­கத்தை ஜப்பான் தாக்­கி­யதை அடுத்து ஐக்­கிய அமெ­ரிக்கா ஜப்­பா­னுக்கு எதி­ராக போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1941 : ஜப்­பா­னுக்கு எதி­ராக சீனக் குடி­ய­ரசு போர் பிர­க­டனம் செய்­தது.

1941 : பசிபிக் போர்: சீனாவில் அமைக்­கப்­பட்­டி­ருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜேர்­மனி மீது போரை அறி­வித்­தது.

1941 : பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்­களைக் கொல்­லு­வ­தற்கு நாசிகள் முதன் முத­லாக நச்சு வாயு பஸ்ஸை பயன்­ப­டுத்­தினர்.

1942 : யுக்­ரைனின் "டேர்­னோப்பில்" என்ற இடத்தில் நாஸி ஜேர்­ம­னி­யர்கள் அங்­கி­ருந்த 1,400 பேர் கொண்ட கடைசித் தொகுதி யூதர்­களை பெல்செக் வதை முகா­மிற்கு அனுப்­பினர்.

1953 : அணு அமை­திக்கே என்று அமெ­ரிக்க அதிபர் டுவைட் டி. ஐச­னோவர் அறி­வித்தார்.

1963 : அமெ­ரிக்­காவின் மேரி­லாந்தில் அமெ­ரிக்க விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 81 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1966 : கிரேக்கக் கப்பல் ஒன்று மத்­திய தரைக் கடலில்  மூழ்­கி­யதில் 200 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1969 : கிரேக்­கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 93 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1972 : அமெ­ரிக்­காவின் சிக்­கா­கோவில் விமா­ன­மொன்று விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 45 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1980 : பிர­பல பீட்டில்ஸ் இசைக்­கு­ழுவைச் சேர்ந்த ஜோன் லெனன் நியூயோர்க்கில் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.
1982 : சூரி­னாமில் இரா­ணுவ ஆட்­சிக்கு எதி­ராகக் கிளர்ச்­சியில் ஈடு­பட்ட பலர் கொல்­லப்­பட்­டனர்.


1985 : இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், நேபாளம், மாலை­தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடு­க­ளினால் சார்க் அமைப்பு  உரு­வாக்­கப்­பட்­டது.

1987 : பெருவின் தலை­நகர் லீமா­வுக்கு அருகில் சென்று கொண்­டி­ருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்­கி­யதில் அதில் பயணம் செய்த பெருவின் கால்­பந்­தாட்ட அணி­யொன்றின் அனைத்து வீரர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

1991 : சோவியத் ஒன்­றி­யத்தைக் கலைப்­ப­தென ரஷ்யா, பெலாரஸ், யுக்ரைன் ஆகிய நாடு­களின் தலை­வர்கள் கூடி முடி­வெ­டுத்­தனர்.

1998 : அல்­ஜீ­ரி­யாவில் 81 பேர் ஆயுதக் குழு­வொன்­றினால் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

2009 : ஈராக்கின் பாக்தாத் நகரில் இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தலில் 127 கொல்­லப்­பட்­டனர்.

2013 : சிங்­கப்பூரில் பஸ் விபத்து ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து இரு மணித்தியாலயங்கள் பாரிய வன்முறைகள் இடம்பெற்றன. 1969 ஆம் ஆண்டின் பின்னர் சிங்கப்பூரில் இடம்பெற்ற இத்தகைய முதலாவது வன்முறை இதுவாகும். 

Post a Comment

0 Comments