மியன்மாரின் வரலாற்று முக்கியம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் மந்தமாக வெளிவரும் நிலை யில் ஆங் சான் சூச்சியின் எதிர்க்கட்சி மாபெரும் வெற்றியொன்றை பெற்றுள்ளது அறிந்ததே..
440 ஆசனங்கள் கொண்ட மியன்மார் பாராளுமன்றத்தின் பலம்மிக்க கீழ் சபையில் நேற்று பின்னேரம்வரை 88 இடங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகி இருந்தன. அதில் சூசியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 78 இடங் களை வென்றுள்ளது.
அத்துடன் House of Nationalities இல் போட்டியிட்ட 33 வேட்பாளர்களில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியினர் 29 இடங்களையும் ( ஆளும்கட்சி இரண்டு சீட் மட்டுமே)
மேலும் Region or State Parliament இல் போட்டியிட்ட 212 வேட்பாளர்களில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியினர் 184 இடங்களையும் ஆளும்கட்சி வெறும் 17 இடங்களையும் மட்டுமே பெற்றுள்ளது.
முன்னாள் இராணுவ அட்சியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மியன்மாரின் ஆளும் கட்சி கட ந்த திங்களன்றே தோல்வியை ஒப்புக் கொண்டிரு ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மியன்மார் பாரா ளுமன்றத் தேர்தல் அந்நாட்டில் 25 ஆண்டுகளில் இட ம்பெற்ற வெளிப்படையான தேர்தலாக அமைந்தது.
எனினும் தேர்தல் ஆணையகத்தால் மந்தமாக வெளியிடப்பட்டு வரும் தேர்தல் முடிவுகளை அவ தானிக்கும்போது இராணுவ அதரவுடைய ஆளும் கட்சி ஒரு படுதோல்வியை நோக்கி செல்வது உறுதியாவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த தோல்வியை ஆளும் இராணுவ ஜன ரல்கள் எவ்வாறு முகம்கொடுக்கப் போகிறார்கள் என்பது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்த லில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றியீட்டியபோதும் அதனை இராணுவம் ரத்தச் செய்ததோடு ஆங் சான் சூச்சி தொடர்ச்சியாக 2010 ஆம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
எவ்வாறாயினும் நாடெங்கும் உள்ள வாக்கு நிலையங்களைக் கொண்டு சூச்சியின் எதிர்க்கட்சி சொந்தமாக பெற்ற முடிவுகளின்படி அந்த கட்சி மூன் றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக கணித்துள்ளது. இது 1960களின் ஆரம்ப காலத்திற்கு பின்னர் நாட்டின் முதலாவது ஜனநாயக அரசொன்றை அமைக்க போதுமான தாகும்.
ஏற்கனவே 664 இடங்கள் கொண்ட பாராளுமன் றத்தில் தேர்தல் மூலமன்றி இராணுவம் கால் பங்கு பிரதிநிதித்துவத்தை அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்துகொண்டுள்ளது. இதனால் எதிர்க்க ட்சி வெற்றி பெற எஞ்சிய இடங்களில் மூன்றில் இரண்டு வாக்குகளை வெல்ல வேண்டி உள்ளது.
தனது கட்சி 75 வீதத்துக்கும் அதிக வாக்கு களை வென்றிருப்பதாக சூச்சி பி.பி.சிக்கு நேற்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தனது கட்சி வெற்றி பெற்றா லும் சூச்சியினால் தேர்வு பெறுவது அரசியல மைப்பில் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்த தியை கொண்டவர் நாட்டின் ஜனாதிபதி ஆவதை அரசியலமைப்பு தடுக்கிறது. அமைதிக்கான நோபல் விருதை வென்ற சூச்சியின் கணவர் மற்றும் குழ ந்தைகள் பிரிட்டன் பிரஜhஉரிமை பெற்றவர்களா வர்.
என்றாலும் தானே நாட்டுக்கு தலை வகிக்கப் போவதாக அவர் உறுதியாக குறிப்பிட்டு வருகி றார். வரும் பெப்ரவரி வரை புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடப்படு கிறது.
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட ஆயிரக்கண க்கானவர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலை யில் இந்த தேர்தலில் நியாயத்தன்மை குறித்து பெரும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
ஏனைய கட்சிகளைப் போன்றே சூச்சியின் கட்சி யும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடமளிக்கவில்லை என்பதோடு துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபா ன்மை முஸ்லிம்களுக்காக அவர் குரல் எழுப்பவி ல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனினும் தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் முஸ்லிம்களை பாதுகாக்கும் என்றும் வெறு ப்பை தூண்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடு க்கப்படும் என்றும் சூச்சி குறிப்பிட்டுள்ளார்.
"தப்பபிப்பிராயத்தையும் வெறுப்புணர்வையும் இலகுவாக அகற்றி விட முடியாது. அதிகப் பெரு ம்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகி றார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவ ர்கள் அச்சத்திலும் வெறுப்பிலும் வாழ விரும்ப மாட்டார்கள்" என்றும் சூச்சி குறிப்பிட்டுள்ளார்.
440 ஆசனங்கள் கொண்ட மியன்மார் பாராளுமன்றத்தின் பலம்மிக்க கீழ் சபையில் நேற்று பின்னேரம்வரை 88 இடங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகி இருந்தன. அதில் சூசியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி 78 இடங் களை வென்றுள்ளது.
அத்துடன் House of Nationalities இல் போட்டியிட்ட 33 வேட்பாளர்களில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியினர் 29 இடங்களையும் ( ஆளும்கட்சி இரண்டு சீட் மட்டுமே)
மேலும் Region or State Parliament இல் போட்டியிட்ட 212 வேட்பாளர்களில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியினர் 184 இடங்களையும் ஆளும்கட்சி வெறும் 17 இடங்களையும் மட்டுமே பெற்றுள்ளது.
முன்னாள் இராணுவ அட்சியாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மியன்மாரின் ஆளும் கட்சி கட ந்த திங்களன்றே தோல்வியை ஒப்புக் கொண்டிரு ந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மியன்மார் பாரா ளுமன்றத் தேர்தல் அந்நாட்டில் 25 ஆண்டுகளில் இட ம்பெற்ற வெளிப்படையான தேர்தலாக அமைந்தது.
எனினும் தேர்தல் ஆணையகத்தால் மந்தமாக வெளியிடப்பட்டு வரும் தேர்தல் முடிவுகளை அவ தானிக்கும்போது இராணுவ அதரவுடைய ஆளும் கட்சி ஒரு படுதோல்வியை நோக்கி செல்வது உறுதியாவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த தோல்வியை ஆளும் இராணுவ ஜன ரல்கள் எவ்வாறு முகம்கொடுக்கப் போகிறார்கள் என்பது பெரும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்த லில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அமோக வெற்றியீட்டியபோதும் அதனை இராணுவம் ரத்தச் செய்ததோடு ஆங் சான் சூச்சி தொடர்ச்சியாக 2010 ஆம் ஆண்டு வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
எவ்வாறாயினும் நாடெங்கும் உள்ள வாக்கு நிலையங்களைக் கொண்டு சூச்சியின் எதிர்க்கட்சி சொந்தமாக பெற்ற முடிவுகளின்படி அந்த கட்சி மூன் றில் இரண்டுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாக கணித்துள்ளது. இது 1960களின் ஆரம்ப காலத்திற்கு பின்னர் நாட்டின் முதலாவது ஜனநாயக அரசொன்றை அமைக்க போதுமான தாகும்.
ஏற்கனவே 664 இடங்கள் கொண்ட பாராளுமன் றத்தில் தேர்தல் மூலமன்றி இராணுவம் கால் பங்கு பிரதிநிதித்துவத்தை அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்துகொண்டுள்ளது. இதனால் எதிர்க்க ட்சி வெற்றி பெற எஞ்சிய இடங்களில் மூன்றில் இரண்டு வாக்குகளை வெல்ல வேண்டி உள்ளது.
தனது கட்சி 75 வீதத்துக்கும் அதிக வாக்கு களை வென்றிருப்பதாக சூச்சி பி.பி.சிக்கு நேற்று அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தனது கட்சி வெற்றி பெற்றா லும் சூச்சியினால் தேர்வு பெறுவது அரசியல மைப்பில் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சந்த தியை கொண்டவர் நாட்டின் ஜனாதிபதி ஆவதை அரசியலமைப்பு தடுக்கிறது. அமைதிக்கான நோபல் விருதை வென்ற சூச்சியின் கணவர் மற்றும் குழ ந்தைகள் பிரிட்டன் பிரஜhஉரிமை பெற்றவர்களா வர்.
என்றாலும் தானே நாட்டுக்கு தலை வகிக்கப் போவதாக அவர் உறுதியாக குறிப்பிட்டு வருகி றார். வரும் பெப்ரவரி வரை புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்று குறிப்பிடப்படு கிறது.
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட ஆயிரக்கண க்கானவர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலை யில் இந்த தேர்தலில் நியாயத்தன்மை குறித்து பெரும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
ஏனைய கட்சிகளைப் போன்றே சூச்சியின் கட்சி யும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடமளிக்கவில்லை என்பதோடு துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபா ன்மை முஸ்லிம்களுக்காக அவர் குரல் எழுப்பவி ல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
எனினும் தனது ஜனநாயகத்திற்கான தேசிய லீக் முஸ்லிம்களை பாதுகாக்கும் என்றும் வெறு ப்பை தூண்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடு க்கப்படும் என்றும் சூச்சி குறிப்பிட்டுள்ளார்.
"தப்பபிப்பிராயத்தையும் வெறுப்புணர்வையும் இலகுவாக அகற்றி விட முடியாது. அதிகப் பெரு ம்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகி றார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவ ர்கள் அச்சத்திலும் வெறுப்பிலும் வாழ விரும்ப மாட்டார்கள்" என்றும் சூச்சி குறிப்பிட்டுள்ளார்.
0 Comments