Subscribe Us

header ads

கத்தார் நாட்டு சிறுவனின் மனப்பாங்கு - சிறு வயதிலேயே பெற்றோர்களின் வளர்ப்பு

நேற்று,  மஹ்ரிப் தொழுதுவிட்டு அருகில் இருந்த #ATM இல் கணக்கு மீதியை சரி பார்த்து #Receipt ஐ எடுத்துக் கொண்டு திரும்பி நடந்து கொண்டிருக்கையில் தொழுகைக்காக வந்து கொண்டிருந்த 13-14 வயது மதிக்கத்தக்க அரபி சிறுவன் என்னை திடீரென நிறுத்தினார். 

சரி என்னதான் விடயம் என்று அவரிடம் கேட்டேன். கையில் என்ன என்றார் ? 

Receipt என்றேன் . 
என்ன Receipt என்றார் ?

 கணக்கு மீதியை சரிபார்க்க வந்தேன் என்றேன். 

அப்படியா ? எவ்வளவு மீதி உள்ளது பணம் எடுக்கவில்லையா? என்றார். ( நானும் சற்று யோசித்துவிட்டு ) ஹ்ம்ம்..118 ரியால்கள் என்றேன். 

அவர் ( ஆச்சரியமாக) அவ்வளவுதானா ? 

ஏன் பணம் எடுக்காமல் வந்தீர் என அடுத்த கேள்வி கேட்க என்னிடம் தேவைக்குரிய பணம் உள்ளது என்று ATM கார்ட்டை எனது பணப்பையில் வைக்கும் போது உண்மையிலே பணம் உள்ளதா என்பதை ஒரு எட்டு எட்டிப் பார்த்தான் . 

ஆம் !! கொஞ்சப் பணம் இருக்கிறது . ( ஒரு வேளை இருப்பதை பறிக்கப்போகிறானோ என்று நினைத்தேன் ).

இருந்தும் அவர் என்னை விடுவதாய் இல்லை. பேச்சை தொடர்ந்தார்..

அதற்காக கேட்கவில்லை, உன்னிடம் பணம் இல்லை என்றால் சொல். என்னிடம் இருக்கின்றது நான் தருகிறேன் என்று அவரது பையில் இருந்து பணம் எடுக்க முற்பட்டார் .

"அல்ஹம்துலில்லாஹ் " என்னிடம் போதியளவு பணம் இருக்கிறது. கேட்டதுக்கு  ஜஸாக்கல்லாஹு ஹைர் என்று அவரை  முஸாபஹா செய்து விட்டு எனக்காக துஆ செய்யுமாறு விடை பெற்றேன் .

அந்த சிறுவனின் பெயர் #அப்துல்லாஹ் , ஒரு கத்தாரி.

படிப்பினை : சிறுவயது முதல் பிறருக்கு உதவும் நல்ல மனப்பாங்கை உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்ப்பதன் மூலம் பிறர் தேவையறிந்து அவர்களை மதித்து உதவக் கூடிய நல்ல மனநிலை கொண்டவர்களாக எதிர்காலத்தில் மிளிருவார்கள் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த சிறுவனின் தேவைகளை பூர்த்தி செய்து அவர் வாழ்வில் பறக்கத் செய்வானாக . ஆமீன்

-சஜாத் காசிம்-

Post a Comment

0 Comments