கலகத்தடுப்பு பொலிசார் பயன்படுத்தும் மரத்தடிகளுக்குப் பதில் ரப்பர் தடிகள் பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் ஆலோசித்துள்ளது.
பொலிசார் பயன்படுத்தும் கலகத்தடுப்பு சாதனமான பெட்டன் தடி எனப்படும் மரத்தடிகள் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் கடுமையான காயங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
இதனைத் தவிர்க்கும் வகையில் ரப்பரினாலான தடிகளை பயன்படுத்த பொலிஸ் திணைக்களம் ஆலோசித்துள்ளது.
இவ்வாறான தடிகள் மூலம் தாக்கப்படும் நபருக்கு வலி தவிர வேறு காயங்கள் ஏற்படாது என்றும் கூறப்படுகின்றது.
இதன் முதற்கட்டமாக ஆயிரம் ரப்பர் தடிகளை கொள்வனவு செய்வதற்கான மனுவொன்றை சட்டம், ஒழுங்கு சிறைச்சாலைகள் அமைச்சுக்கு சமர்பித்துள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல்க்ள தெரிவிக்கின்றன.
எனினும் இதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
0 Comments