திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
மாலை 6.45 மணியளவில் குறித்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளம் வாலிபர்களால் குறித்த கடையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்திருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தாலி மற்றும் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments