அனுராதபுரத்தில் ஹோட்டல் உரிமையாளரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இரோன் ரணசிங்க அண்மையில் கைதுசெய்யப்பட்டார்.
எஸ்.எப். லொகு என்றழைக்கப்படும் அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் இச்சம்பவம் தொடர்பில் பேஸ்புக்கில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளி தற்போது தீயாக பரவிவருகின்றது.
அதில் இச்சம்பவம் தொடர்பிலும் , தனது செயல் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
தான் கொலையை மேற்கொள்ளவில்லையென தெரிவித்துள்ள அவர், ஹோட்டல் உரிமையாளரான கராத்தே வசந்த கொலை செய்யப்பட்டதையடுத்து பிரதேசத்தில் சிலர் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதாகவும் தெரிவிக்கின்றார்.
0 Comments