என்றும் எமது மனங்களில் உயிர்ப்புடன் வாழும் மர்ஹூம் எம்.ஐ.எம்.நளீம் ஹாஜியார் நாம் பிறப்பதற்கு முன்பே 1962 இல் ஆரம்பிக்கப்பட்ட மாக்கோல முஸ்லிம் அநாதை நிலையத்துக்கு பல வழிகளிலும் உதவி செய்துள்ளார். அவரது உதவிகள் இன்றும் கூட இந்நிலையத்துக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் அன்னாரின் இந்த நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக. அண்மையில் Makola Muslim Orpanage Old Boys Association அன்னாரின் சேவைகளை நினவு கூர்ந்து "ஹாதிமுல் அய்தாம்" அனாதைகளின் பணியாளர் எனும் விருது வழங்கி அன்னாரை கௌரவித்தது. மர்ஹூம் நளீம் ஹாஜியாரின் குடும்பம் சார்பில் அன்னாரின் பேரன் அல்ஹாஜ் இஸ்ரத் அலி விருதைப் பெற்றுக் கொண்டார்.



0 Comments