புத்தளம் சமூக நல்லாட்சி மன்றத்தினால் சர்வதேச கைகழுவுதல் தினம் நேற்று (2015 ஒக்டோபர் 15 ) நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் தொனிப்பொருளாக “கைகழுவுதல் மூலம்ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புதல் |”
இச் செயன்முறையை சமூக மத்தியில் தொடர்ச்சியாக ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியாமான சமூகமொன்றை கட்டியெழுப்பும் வேலைத்திட்டமொன்று நாட்டில் தெரிவு செய்யப்பட்ட கல்வியல் கல்லூரிகள் ,உயர்கல்வி நிறுவனங்கள் பாடசாலைகள், மஸ்ஜித்கள், வளாகங்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இந் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேற்படி சமூக நல்லாட்சி மன்றத்தின் தலைவர் எம்.எப்.எம். ரியாஸ் ( விரிவுரையாளர் , மற்றும் அரசியல் ஆய்வாளர் ). இந்நிகழ்ச்சியை நடாத்தி வைத்தார். மேற்படி நிகழ்ச்சியில் சமூக நல்லாட்சிக்கான மன்றத்தின் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
-Muja Nizar-
-Muja Nizar-
0 Comments