Subscribe Us

header ads

நாட்டில் அதிகரித்துவரும் சிறுவர் மரணங்கள்: புத்தலவில் சிறுவனுக்கு நடந்தது என்ன? (காணொளி)

இலங்கையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் , மற்றும் சிறுவர்கள் காணாமல் போவது , உயிரிழப்பது என பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.


இந்நிலையில் , புத்தல - கோணகங்ஹார பிரதேசத்தில் 4 நாட்களாக காணாமல் போயிருந்த சிறுவனொருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட து.

8 வயது சிறுவனொருவரின் சடலமே மாணிக்கங்கையில் கண்டுபிடிக்கப்பட் ட து.

சுபுன் புஸ்பகுமார என்ற சிறுவன் வயலில் இருந்து வீட்டுக்கு செல்வதாக தந்தையிடம் கூறி சென்றுள்ள போதிலும் அங்கு செல்லவில்லையெனவும்  இடைநடுவே காணாமல் போயுள்ளார்.

பின்னர் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தேடல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையிலே சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments