Subscribe Us

header ads

பாடசாலை மாணவிக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரர் - ஆணமடுவையில் சம்பவம்

பாடசாலை மாணவியொருக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரரொருவரை கைதுசெய்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆணமடுவ- கம்உதாவ சந்தியிலேயே குறித்த சந்தேகநபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.13 வயதான மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வேளையிலேயே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

சந்தேகநபர் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் 33 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் சேவையாற்றுபவர் எனவும் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments